2015-03-05 16:02:00

மரணதண்டனைக்கு எதிராக ஆதரவு பெருகுவதால் திருஅவை மகிழ்ச்சி


மார்ச்,05,2015. மரணதண்டனையை ஒழிக்கவேண்டும் என்பதில் அரசுகளும், பொதுமக்களின் கருத்தும் வலுவடைந்து வருவதைக் கண்டு திருப்பீடம் மகிழ்கிறது என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

ஐ.நா. அவையும், ஏனைய உலக அமைப்புகளும் 'மரணதண்டனை என்ற கேள்வி'  என்ற கருத்தை மையப்படுத்தி ஜெனீவாவில் மேற்கொண்ட ஒரு கருத்துப் பரிமாற்றத்தில், திருப்பீடத்தின் சார்பாக உரையாற்றிய பேராயர் சில்வானோ தொமாசி அவர்கள் இவ்வாறு கூறினார்.

மனிதர்களின் அடிப்படை மாண்பு மதிக்கப்படவேண்டும் என்பதை திருப்பீடம் எப்போதும் வலியுறுத்தி வந்துள்ளது என்று எடுத்துரைத்த பேராயர் தொமாசி அவர்கள், உலக அரசுகள் இந்த உண்மையை ஏற்றுக்கொள்ள துவங்கியிருப்பது நல்லதோர் அடையாளம் என்று கூறினார்.

இரத்தம் சிந்தாமல், மனித உயிர்களைப் பாதுகாக்க முடியும் என்பதையும், பொதுநலனைப் பேணி வளர்க்க முடியும் என்பதையும் அரசுகள் இன்னும் தீவிரமாக ஆய்வு செய்ய வேண்டும் என்று பேராயர் தொமாசி அவர்கள் தன் உரையில் வலியுறுத்தினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.