2015-03-04 15:34:00

550 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு ‘மார்ஃபின்’ கிடைப்பதில்லை


மார்ச்,04,2015 உலகில், நான்கில் மூன்று பங்கு மக்களுக்கு, அதாவது, ஏறத்தாழ 550 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு ‘மார்ஃபின்’ போன்ற வலி நிவாரண மருந்துகளை உபயோகிக்க குறைந்த வழிகள் அல்லது முற்றிலும் உபயோகிக்க வழியே இல்லாமல் இருக்கிறது என்று ஐ.நா.வின் போதைப்பொருள் கண்காணிப்புப் பிரிவின் பன்னாட்டு போதைப்பொருள் கட்டுப்பாட்டு வாரியம் கூறியுள்ளது.

வியென்னாவிலிருந்து செயலாற்றும் INCB, (International Narcotics Control Board) என்ற வாரியம் இச்செவ்வாயன்று வெளியிட்ட ஆண்டறிக்கையில்,  உலக மக்கள் தொகையில் 17 விழுக்காட்டினர் மட்டுமே, உலகில் கிடைக்கும் வலி நிவாரணியான மார்ஃபினில், 92 விழுக்காட்டிற்கும் அதிமான அளவை உபயோகிக்கின்றனர் என்று கூறப்பட்டுள்ளது.

பெரும்பாலும் வட அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா, ஆஸ்திரேலியா மற்றும் நியுஸீலாந்தில் தான் மார்ஃபின் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.

மேற்கு ஐரோப்பாவில், செயற்கை முறையில் தயாரிக்கப்படும் heroin போதைப்பொருளின் தவறானப் பயன்பாட்டின் அதிகரிப்பு, மற்றும் அதனால் விளையும் உயிரிழப்பு எண்ணிக்கையின் அதிகரிப்பு பற்றியும் இந்த ஆய்வறிக்கை மேலும் குறிப்பிடுகிறது

ஆதாரம் :  UN / வத்திக்கான் வானொலி

 








All the contents on this site are copyrighted ©.