2015-02-26 15:49:00

சிரியா நாடு வரலாற்றில் 200 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றுள்ளது


பிப்.26,2015 ஐரோப்பிய, அமெரிக்க நாட்டவரின் இராணுவத் தலையீட்டால், சிரியா நாடு வரலாற்றில் 200 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றுள்ளது என்று அந்நாட்டின் ஆயர் ஒருவர் கூறியுள்ளார்.

Hassaké-Nisibis என்ற சிரிய கத்தோலிக்க உயர் மறைமாவட்டத்தின் பேராயர், Jacques Behnan Hindo அவர்கள், பிரான்ஸ், மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடு ஆகிய பன்னாட்டு ஆதரவுடன் போராட்டக் குழுக்கள் சிரியாவில் வலுவடைந்தன என்றும், தற்போது, இக்குழுக்கள் அத்துமீறி வன்முறைகளில் ஈடுபடுவதைத் தடுக்க இந்நாடுகள் மீண்டும் இராணுவத் தலையீட்டை மேற்கொள்கின்றன என்றும் குறிப்பிட்டார்.

அடிப்படைவாதக் கொள்கைகள் கொண்ட இந்தப் போராட்டக் குழுக்கள் கடந்த மூன்று நாட்களில் Khabur நதிக்கரையில் அமைந்துள்ள மூன்று கிறிஸ்தவ கிராமங்களைக் கைப்பற்றியுள்ளன என்றும், அங்கு வாழும் கிறிஸ்தவர்களில் 140க்கும் அதிகமானோர் பிணையக் கைதிகளாக சிக்கியுள்ளனர் என்றும் பேராயர் Hindo அவர்கள் Fides செய்திக்கு அளித்த பேட்டியில் சுட்டிக்காட்டினார்.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.