2015-02-24 15:17:00

பாங்காக் புதிய கர்தினால் - உலகாயுதப் போக்கு தீயவனின் முகம்


பிப்.24,2015. மக்கள் மத்தியில் உறவுப் பாலங்களைக் கட்டுவதற்கும், இக்காலத்திய உலகாயுதப் போக்குக்கு எதிராகச் செல்வதற்கு கத்தோலிக்கரை உருவாக்குவதற்கும் தாய்லாந்து திருஅவை முயற்சித்து வருகின்றது என்று கூறினார் அந்நாட்டின் புதிய கர்தினால் Francis Xavier Kriengsak Kovithavanij.

இம்மாதம் 14ம் தேதி புதிய கர்தினாலாகத் திருநிலைப்படுத்தப்பட்ட பாங்காக் கர்தினால் Kriengsak அவர்கள் CNA செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், தாய்லாந்து திருஅவை இக்காலத்தில் உலகாயுதப் போக்கு என்ற சவாலை எதிர்கொண்டு வருகிறது என்று தெரிவித்தார்.

தாய்லாந்தில் வாழும் மியான்மார் அகதிகள் பற்றியும் பேசிய கர்தினால் Kriengsak அவர்கள், 2007ம் ஆண்டில் முப்பது இலட்சம் அகதிகள் மியான்மாரிலிருந்து தாய்லாந்து வந்தனர், அவர்கள் தாய்லாந்தில் தொடர்ந்து வாழ்வதற்கு, தாய்லாந்து அரசால் உதவி செய்ய முடியாததால் அவர்களுக்கு அகதிகள் என்ற நிலை கொடுக்கப்படவில்லை என்று கூறினார்.

ஆயினும் மியான்மார் அகதிகள் தாய்லாந்தில் தொடர்ந்து வாழ்ந்து வருகின்றனர் என்றும், யாங்கூன் புதிய கர்தினால் சார்லஸ் போ அவர்களுக்கும் தனக்குமிடையே அதிக ஒத்துழைப்பு ஏற்பட இது காரணமானது என்றும் கூறினார் பாங்காக் கர்தினால் Kriengsak.

ஆதாரம் : CNA/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.