2015-02-24 15:11:00

அர்மேனியப் புனிதர் கிரகரி திருஅவையின் மறைவல்லுனர்


பிப்.24,2015. அர்மேனியக் கவிஞரும், ஆதினத் துறவியுமான Narek புனித கிரகரி அவர்களை, அகிலத் திருஅவையின் மறைவல்லுனர் என அறிக்கையிட்டுள்ளார்  திருத்தந்தை பிரான்சிஸ்.

கடந்த சனிக்கிழமையன்று கர்தினால் ஆஞ்சலோ அமாத்தோ அவர்கள் முன்வைத்த பரிந்துரையை ஏற்று, இந்த பத்தாம் நூற்றாண்டு புனிதரை மறைவல்லுனர் என  அறிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அர்மேனிய நகரமான Narekல் கி.பி.951ம் ஆண்டில் பிறந்த புனித கிரகரி, வல்லுனர்கள் மற்றும் திருஅவை மனிதர்கள் பரம்பரையைச் சேர்ந்தவர். இவரது தந்தையான ஆயர் Khosrov அவர்கள், அக்காலத்திலேயே திருவழிபாடு பற்றிய விளக்கங்களை எழுதியவர். புனித கிரகரி எழுதிய புலம்பல்கள் நூல் மிகவும் புகழ்பெற்றது. இதயத்தின் ஆழத்திலிருந்து இறைவனோடு உரையாடும் 95 செபங்களைக் கொண்டது இந்நூல்.

தற்போது திருஅவையில், Narek புனித கிரகரியுடன் சேர்த்து முப்பத்தாறு(36) மறைவல்லுனர்கள் உள்ளனர்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், திருப்பீட தலைமையக அதிகாரிகளும் அரிச்சா நகரில் நகரில் ஆண்டு தியானம் செய்துகொண்டிருக்கின்றனர். இத்தியானம் வருகிற வெள்ளிக்கிழமையன்று நிறைவடையும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.