பிப்.23,2015 சிறுபான்மையினரின் குறைகளுக்குச் செவிமடுக்கும் நோக்கத்தில் 24 மணிநேரமும் தொடர்புகொள்ளக்கூடிய தொலைபேசி பணியையும், முகநூல் மற்றும் டுவிட்டர் வழி தொடர்புகளையும் துவக்கவுள்ளதாக டில்லி காவல்துறை அறிவித்துள்ளது.
அண்மைக் காலமாக கிறிஸ்தவ நிறுவனங்களும், கிறிஸ்தவர்களும் தாக்கப்படுவது டில்லியில் அதிகரித்துள்ள நிலையில், இவ்வன்முறைகளைத் தடுக்கும் நோக்கத்தில் டில்லி காவல்துறையால் உருவாக்கப்பட்டுள்ள இத்திட்டம் குறித்து தங்கள் பாராட்டை வெளியிட்டுள்ள கிறிஸ்தவ சமூகங்கள், சிறுபான்மையினர் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் குறித்த விசாரணைகள், காவல்துறையால் நேர்மையான முறையில் நடத்தப்பட வேண்டும் எனவும் விண்ணப்பித்துள்ளன.
கடந்த காலங்களில் 206 இந்து கோவில்கள் தாக்கப்பட்டுள்ள நிலையில், 3 கிறிஸ்தவ கோவில்களே தாக்கப்பட்டுள்ளன என்ற ஒப்புமைப் புள்ளிவிவரங்களை டில்லியின் புதிய காவல்துறை உயர் அதிகாரி, Bhim Sain Bassi அவர்கள் செய்தியாக வெளியிட்டிருப்பது குறித்த கவலையையும், கிறிஸ்தவ சமூகம் வெளியிட்டுள்ளது.
ஆதாரம் : AsianAge / வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |