2015-02-23 15:57:00

அரிச்சாவில் ஆண்டு தியானத்தில் திருத்தந்தை


பிப்.23,2015. இஞ்ஞாயிறு முதல் உரோம் நகருக்கு வெளியே அரிச்சா என்ற நகரில் தன் ஆண்டு தியானத்தை துவக்கியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பிப்ரவரி 22, இஞ்ஞாயிறிலிருந்து பிப்ரவரி 27 வெள்ளிக்கிழமைவரை திருப்பீட தலைமையக அதிகாரிகளுடன் இணைந்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆண்டு தியானம் செய்துவருவதால், இவ்வாரத்தில் திருத்தந்தையின் பொது நிகழ்வுகள் எதுவும் இடம்பெறாது.

உரோம் நகருக்கு தெற்கே ஏறக்குறைய இருபது மைல் தூரத்திலுள்ள அரிச்சா நகர் விண்ணகப் போதகர் தியான இல்லத்தில் திருத்தந்தையும் திருப்பீட தலைமையக அதிகாரிகளும் மேற்கொள்ளும் இத்தியானத்திற்கு 'வாழும் இறைவனின் பணியாளர்களும் இறைவாக்குரைஞர்களும்' என்பது தலைப்பாக எடுக்கப்பட்டுள்ளது.

கார்மேல் துறவுசபையின் அருள்பணி Bruno Secondin என்பவர் இத்தியானத்தை வழிநடத்துகிறார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.