2015-02-23 16:16:00

ISIS வன்முறைச் செயல்களுக்கு ஐ.நா. பாதுகாப்பு அவை கண்டனம்


பிப்.23,2015 லிபியாவின் Al-Qubbah என்ற இடத்தில், கடந்த வெள்ளியன்று IS இஸ்லாமியத் தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதல் குறித்து, தன் வன்மையான கண்டனத்தை வெளியிட்டுள்ளது, ஐ.நா. பாதுகாப்பு அவை.

வெள்ளி காலை இஸ்லாமியத் தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட இத்தாக்குதலில் குறைந்தது 45 பேர் உயிரிழந்துள்ளனர், மற்றும் பலர் காயமடைந்துள்ளனர் என்று ஊடகங்கள் கூறுகின்றன.

இத்தாக்குதல் குறித்து கண்டனத்தை வெளியிட்ட ஐ.நா. பாதுகாப்பு அவை, IS தீவிரவாதிகள் தோற்கடிக்கப்படுவதொடு, வன்முறைகளும் பகைமையும், சகிப்பற்றத் தன்மையும் முற்றலுமாக அகற்றப்பட வேண்டும் என்று விண்ணப்பித்துள்ளது.

மனித குலத்திற்கு எதிராக தீவிரமான வன்முறைச் செயல்களில் ஈடுபடுவோர் தண்டிக்கப்பட வேண்டும் என்றும், ஐ.நா. பாதுகாப்பு அவை விண்ணப்பித்துள்ளது.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.