2015-02-21 15:57:00

தலித் கிறிஸ்தவர்க்கு எதிரான பாகுபாட்டை நிறுத்த வேண்டுகோள்


பிப்.21,2015. இந்தியாவில் தலித் கிறிஸ்தவர்களுக்கு எதிரான சட்ட முறையான பாகுபாடு முடிவுக்குக் கொண்டுவரப்படுமாறு இந்திய கத்தோலிக்கத் திருஅவை அரசைக் கேட்டுள்ளது.

இது குறித்துப் பேசிய டெல்லி பேராயர் அனில் கூட்டோ அவர்கள், இந்துமத தலித் மக்களைப் போலவே தலித் கிறிஸ்தவர்களும் சலுகைகளை அனுபவிக்கும் சட்டத்தைக் கொண்டுவருவதற்கு நேரம் இதுவே என்றும், அறுபது ஆண்டுகளாக தலித் கிறிஸ்தவர்கள் சலுகைகள் மறுக்கப்பட்டு வாழ்கிறார்கள் என்றும் கூறினார்.

தலித் கிறிஸ்தவர்கள் எதிர்கொள்வது, மதத்தின் அடிப்படையில் இடம்பெறும் அநீதியான பாகுபாட்டு விவகாரமாகும், சமயச் சார்பற்ற ஒரு நாட்டில் இந்நிலை இடம்பெறக் கூடாது என்றும் டெல்லி பேராயர் அனில் கூட்டோ கூறினார்.

1950ம் ஆண்டின் குடியரசுத்தலைவர் ஆணையைக் குறிப்பிட்டுப் பேசிய பேராயர், தலித் சமூகங்களுக்கு கல்வி, வேலை மற்றும் சமூகநலப்பணித் துறைகளில் வழங்கப்பட்டுள்ள சிறப்பு உறுதிகளையும் குறிப்பிட்டார்.

இந்தியாவின் 1 கோடியே 70 இலட்சம் கத்தோலிக்கரில் 60 விழுக்காட்டுக்கு மேற்பட்டோர் தலித்துகள் என பீதெஸ் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.    

ஆதாரம் : Fides/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.