2015-02-21 15:52:00

அரிச்சாவில் திருத்தந்தையின் ஆண்டு தியானம் - பிப்ரவரி 22-27


பிப்.21,2015. “கடவுளால் மன்னிக்கப்பட முடியாத பாவம் என்று எதுவுமில்லை, நாம் அவரிடம் மன்னிப்புக்காக இறைஞ்சுவதே நம் அனைவருக்கும் தேவையானது”என்ற வார்த்தைகளை, இச்சனிக்கிழமையன்று தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். 

மேலும், பிப்ரவரி 22, இஞ்ஞாயிறிலிருந்து  பிப்ரவரி 27 வருகிற வெள்ளிக்கிழமைவரை திருப்பீட தலைமையக அதிகாரிகளுடன் இணைந்து ஆண்டு தியானம் செய்யவுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

உரோம் நகருக்கு தெற்கே ஏறக்குறைய இருபது மைல் தூரத்திலுள்ள அரிச்சா நகர் விண்ணகப் போதகர் தியான இல்லத்தில் தியானம் செய்யவிருக்கிறார் திருத்தந்தை.

இந்த வாரத்தில் திருத்தந்தையின் எந்தப் பொது நிகழ்வுகளும் இடம்பெறாது. கடந்த ஆண்டு இத்தியானத்தில், கர்தினால்கள், ஆயர்கள் என ஏறக்குறைய எண்பது பேர் திருத்தந்தையுடன் சேர்ந்து தியானம் செய்தனர்.

ஆதாரம்:வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.