2015-02-18 15:45:00

திருத்தந்தை : நாங்கள் பாவிகள் என உணரும் அருளைத் தந்தருளும்


பிப்.18,2015 "நாங்கள் பாவிகள் என்பதை உணரும் அருளை இறைவா எங்களுக்குத் தந்தருளும்" என்ற வார்த்தைகளை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தவக்காலத்தின் முதல் நாளான இப்புதனன்று தன் Twitter செய்தியாக வெளியிட்டார்.

திருநீற்றுப் புதன் நிகழ்வுகளின் ஒரு பகுதியாக, இப்புதன் மாலை 4.30 மணிக்கு புனித ஆன்செல்ம் பசிலிக்காவிலிருந்து புறப்படும் பாவப்பரிகார ஊர்வலத்தில் கலந்துகொள்ளும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 5 மணிக்கு, புனித சபீனா பசிலிக்காவில் திருநீற்றுப் புதன் திருப்பலியை நிகழ்த்துகிறார்.

மேலும், இத்தாலியக் கரைகளை அடையும் புலம்பெயர்ந்தோரை கடலிலிருந்து காப்பாற்றி கரைசேர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ள கடற்கரைக் காவல் படையினரில் 8 பேர் அடங்கிய ஒரு சிறப்புக் குழுவை, பிப்ரவரி 17, இச்செவ்வாய் மாலை ஏழு மணியளவில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தில் சந்தித்தார்.

கடற்கரைக் காவல் படையினர் ஆற்றிவரும் மனிதாபிமானப் பணிகளுக்கு திருத்தந்தை அவர்கள் தன் மனமார்ந்த நன்றியையும், பாராட்டுக்களையும் இச்சந்திப்பின்போது வெளியிட்டார் என்று திருப்பீடச் செய்தித் தொடர்பாளர் அருள்பணி Federico Lombardi அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.