2015-02-17 15:39:00

குடியேற்றதாரரின் பயணத்துக்கு உணவும் நீரும் கொடுத்து உதவி


பிப்.17,2015. மெக்சிகோவில் 'La Patrona' என்ற ஒரு பெண்கள் அமைப்பு கடந்த இருபது ஆண்டுகளாக, அந்நாட்டிலிருந்து அமெரிக்க ஐக்கிய நாட்டுக்குச் செல்லும் குடியேற்றதாரர்களின் வழிப்பயணத்துக்கு உணவும் நீரும் கொடுத்து உதவி வருகிறது.

பிப்ரவரி 14, கடந்த சனிக்கிழமையன்று இந்த அமைப்பு தொடங்கப்பட்டதன் ந்இருபது ஆண்டு நிறைவு சிறப்பிக்கப்பட்டது. இந்நிகழ்வில் உரையாற்றிய Saltillo ஆயர் José Raúl Vera López அவர்கள், அரசு மற்றும் அரசியல்வாதிகளின் பேராசை, தன்னலம் மற்றும் பெருமைக்கு எதிர் சாட்சியங்களாக இவ்வமைப்பினர் பணியாற்றி வருகின்றனர் என்று கூறினார்.

'La Patrona' பெண்கள் அமைப்பு, இரயில் பாதைகளில் நின்றுகொண்டு  அமெரிக்க ஐக்கிய நாட்டுக்குச் செல்லும் குடியேற்றதாரர்களின் வழிப்பயணத்துக்கு உணவும் நீரும் கொடுத்து உதவி வருகிறது.

ஆதாரம் : Fides/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.