2015-02-16 16:33:00

தூர கிழக்கு மக்களுக்கு திருத்தந்தை புத்தாண்டுக்கு வாழ்த்து


பிப்.16,2015. எல்லாக் காலத்தையும் சேர்ந்த எல்லா மக்களுக்கும் மகிழ்வைக் கொணரவே இயேசு இவ்வுலகுக்கு வந்தார் என்ற செய்தியை தனது டுவிட்டர் பக்கத்தில் இத்திங்களன்று வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இத்திங்களன்று காலை வத்திக்கானில், வெனிசுவேலாவின் முன்னாள் யூத தலைமைக்குரு Pynchas Brener அவர்களையும் சந்தித்து உரையாடினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், இம்மாதம் 19ம் தேதி வியாழனன்று சிறப்பிக்கப்படும் லூனார் புத்தாண்டையொட்டி தூர கிழக்கு நாட்டு மக்களுக்குத் தனது நல்வாழ்த்துக்களை இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரைக்குப் பின் வழங்கினார் திருத்தந்தை.

உடன்பிறப்பு உணர்வை மீண்டும் கண்டுகொள்வதற்கு உதவும் சிறந்த தருணமாக இப்புத்தாண்டு கொண்டாட்டங்கள் இருக்கட்டும் எனவும் வாழ்த்தினார் திருத்தந்தை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.