2015-02-14 15:35:00

புதிய கன்சிஸ்டரி திருவழிபாட்டில் திருத்தந்தை 16ம்பெனடிக்ட்


பிப்.14,2015. இச்சனிக்கிழமையன்று  வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் நடைபெற்ற புதிய கர்தினால்கள் அவை திருவழிபாட்டில் முன்னாள் திருத்தந்தை 16ம்பெனடிக்ட் அவர்களும் கலந்துகொண்டார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் அழைப்பை ஏற்று இந்நிகழ்வில் கலந்துகொண்டார் திருத்தந்தை 16ம்பெனடிக்ட்.

மேலும், இத்திருவழிபாட்டில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு, தங்களின் நன்றியையும், பணிவையும், பற்றுறுதியையும், மனத்தாராளத்தையும், புதிய கர்தினால்களின் சார்பாகத் தெரிவித்தார், புதிய கர்தினால் தோமினிக் மம்பெர்த்தி.

Apostolic Signatura என்ற வத்திக்கானின் உச்சநீதிமன்றத் தலைவராகிய புதிய கர்தினால் தோமினிக் மம்பெர்த்தி அவர்கள், வயது காரணமாக இந்நிகழ்வில் கலந்துகொள்ள இயலாமல், கொலம்பியாவில் சிவப்புத் தொப்பியைப் பெறவிருக்கும் புதிய கர்தினால் José de Jesùs Pimiento Rodriguez அவர்கள் சார்பாகவும் நன்றி தெரிவிப்பதாகக் கூறினார்.

திருத்தந்தைக்குத் தங்களின் உண்மையான ஒத்துழைப்பையும், விசுவாசத்தையும் அளிக்கவும், நம் ஆண்டவரின் பணியில் திருத்தந்தைக்கு நெருக்கமாக இருந்து ஆதரவளிக்கவும் தாங்கள் தயாராக இருப்பதாக உறுதி கூறினார் புதிய கர்தினால் மம்பெர்த்தி.

ஆதாரம்:வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.