2015-02-13 15:48:00

கடுகு சிறுத்தாலும் : சமுகத்திற்கு விரோதமாகச் செயல்படாதீர்கள்


கோடாலியின் கைப்பிடி உடைந்ததால், வேலை செய்யமுடியாமல் காட்டிற்குள் சென்று, ஒரு மரத்தடியில் சோகமாக உட்கார்ந்திருந்த ஒரு மனிதரைப் பார்த்து அந்த மரம் சொன்னது, ‘கவலைப்படாதே, நான் உனக்கு கைப்பிடித் தருகிறேன்’ என்று. அந்த மரத்திலிருந்து ஒரு கைப்பிடியைத் தன் கோடாலிக்குப் போட்ட அந்த மனிதர், உடனே அங்குள்ள மரங்களை வெட்ட ஆரம்பித்தார். வெகு சீக்கிரம் பல மரங்கள் கீழே விழுந்தன. அதைப் பார்த்த ஒரு வயதான மரம், ‘நமக்குள் ஒருவன் அந்த மனிதருக்குக் கைப்பிடி கொடுக்காவிட்டால், இத்தனை மரங்களை அவர் வெட்டியிருக்க முடியுமா?’ என்று மனமுடைந்து அழுதது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.