2015-02-12 15:11:00

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் முடிவும், கிறிஸ்தவர்களும்


பிப்.12,2015. டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில், ஆம் ஆத்மி கட்சி 70 இடங்களில் 67 இடங்களைப் பிடித்து அமோக வெற்றி பெற்றுள்ளது. பிப்ரவரி 14, வருகிற சனிக்கிழமையன்று அக்கட்சித் தலைவர் அர்விந்த் கெஜ்ரிவால் அவர்களும் முதல்வராகப் பொறுப்பேற்கவுள்ளார். டெல்லியில் அண்மைக் காலத்தில் கிறிஸ்தவ ஆலயங்கள் சேதமாக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இத்தேர்தல் முடிவு பற்றி கிறிஸ்தவர்களின் நிலைமையை அறிவதற்கு அ.பணி சூசை செபஸ்தியான் அவர்களைத் தொலைபேசியில் அழைத்து சில கேள்விகளை முன்வைத்தோம். அ.பணி சூசை செபஸ்தியான் அவர்கள், டெல்லி உயர்மறைமாநிலத்தின் முதன்மைக் குரு ஆவார். மேலும், டெல்லி உயர்மறைமாநிலத்தில் பல பணிக்குழுக்களுக்கும் இவர் பொறுப்பானவர்.








All the contents on this site are copyrighted ©.