2015-02-12 15:51:00

சிரியாவைக் காட்டிலும், இந்தியாவில் பாதுகாப்பற்ற நிலை


பிப்.12,2015 போர்ச்சூழல் நிறைந்த சிரியா நாட்டைக் காட்டிலும், இந்தியாவில் 2014ம் ஆண்டு பாதுகாப்பற்ற நிலை இருந்ததென்று இந்திய வெடிகுண்டு தகவல் மையம் அறிவித்துள்ளது.

NBDC (National Bomb Data Centre) என்ற தகவல் மையம் வழங்கியுள்ள தகவல்களின்படி, 2014ம் ஆண்டு, 313 வெடிகுண்டு தாக்குதல்களுடன் பாகிஸ்தான் முதலிடத்திலும், 246 தாக்குதல்களுடன் ஈராக் இரண்டாவது இடத்திலும் உள்ளன.

ISIS தீவிரவாத அமைப்புடன் மோதல்களில் ஈடுபட்டுள்ள சிரியாவில் 33 வெடிகுண்டு தாக்குதல்களே நடைபெற்றுள்ளவேளை, இந்தியாவில் 190 முறை இத்தாக்குதல்கள் 2014ம் ஆண்டு நிகழ்ந்துள்ளதென NBDC தகவல் கூறுகிறது.

இந்தியாவில் நிகழ்ந்த 190 தாக்குதல்களில், பெரும்பாலானவை சட்டிஸ்கர், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் நிகழ்ந்தன என்று இத்தகவல் வழியே தெரிய வந்துள்ளது.

வெடிமருந்துகள் விற்பனையில் நாடுதழுவிய கடுமையான சட்டங்கள் இல்லாதக் காரணத்தால், இந்தியாவில் வெடுகுண்டுகளின் பயன்பாடு பெருகிவிட்டது என்று இந்தியத் தேசியப் பாதுகாப்புத் துறையின் (NSG - National Security Guard) தலைவர், J.N.Choudhury அவர்கள் கூறியுள்ளார்.

ஆதாரம் : TOI / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.