2015-02-12 16:08:00

ஈரான் நாட்டுத் துணைத் தலைவர் திருத்தந்தையுடன் சந்திப்பு


பிப்.12,2015 ஈரான் நாட்டுத் துணைத் தலைவர், Shahindokht Molaverdi அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை இவ்வியாழன் மதியம் திருப்பீடத்தில் சந்தித்தார். இச்சந்திப்பிற்குப் பின், Molaverdi அவர்கள், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரொ பரோலின் அவர்களையும் சந்தித்துப் பேசினார்.

மேலும், ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனத்தில் திருப்பீடத்தின் சார்பில் நிரந்தரப் பார்வையாளராகப் பணியாற்ற, அருள் பணியாளர் Fernando Chica Arellano அவர்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வியாழனன்று நியமித்தார்.

1963ம் ஆண்டு ஸ்பெயின் நாட்டில் பிறந்த Arellano அவர்கள், 1987ம் ஆண்டு அருள் பணியாளராகத் திருநிலைப் படுத்தப்பட்டு, 2002ம் ஆண்டு முதல் பல்வேறு திருப்பீடத் துறைகளில் பணியாற்றி வந்துள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.