2015-02-11 15:53:00

உலகப் பொருளாதார அமைப்புக்கள் உதவ வேண்டும் - பேராயர் Auza


பிப்.11,2015 வளரும் நாடுகள் தங்கள் முன்னேற்றத் திட்டங்களைச் செயல்படுத்தத் தேவையான பொருளாதார உதவிகளைப் பெறுவதற்கு உலகப் பொருளாதார அமைப்புக்கள் உதவிகள் செய்யவேண்டும் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கேட்டுக்கொண்டார்.

‘2015ம் ஆண்டுக்குப்பின் முன்னேற்றத் திட்டம்’ என்ற தலைப்பில் நியூயார்க் நகரில் நடைபெற்ற ஐ.நா. பொதுஅவைக் கூட்டம் ஒன்றில், திருப்பீட நிரந்தரப் பார்வையாளராகப் பங்கேற்ற பேராயர் Bernardito Auza அவர்கள் ஆற்றிய உரையில் இவ்வாறு கூறினார்.

தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு நாடு மேற்கொள்ளும் முன்னேற்ற முயற்சிகளுக்கு, வளரும் நாடுகள் மிக அதிக அளவு முதலீடுகளைச் செய்யும் கட்டாயத்திற்கு உள்ளாகின்றன என்பதையும் பேராயர் Auza அவர்கள் கவலையுடன் எடுத்துரைத்தார்.

பொருளாதார ஊற்றுகள், தொழில்நுட்ப வளர்ச்சி, உள்நாட்டுத் திறமைகளை வளர்த்தல் ஆகிய மூன்று அம்சங்களின் அடிப்படையில் முன்னேற்றத் திட்டங்கள் வகுக்கப்படவேண்டும் என்று பேராயர் Auza அவர்கள் தன் உரையில் விண்ணப்பித்தார்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.