2015-02-09 16:42:00

சிறார் பாதுகாப்பில் ஆயர்கள் பொறுப்புணர்விற்கு முக்கியத்துவம்


பிப்.09,2015. சிறார்களை பாதுகாப்பதற்கென ஆயர் பேரவைகளால் உருவாக்கப்பட்டு திருப்பீடத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள விதிமுறைகளை கடைபிடிக்கத் தவறும் ஆயர்கள், கடுமையான பின்விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என அறிவித்துள்ளார் Boston கர்தினால் Sean  O’Malley.

சிறார் பாதுகாப்பிற்கான திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் O’Malley, புதிய விதிகளை பரிந்துரைத்து உரோம் நகரில் நிருபர்கள் கூட்டத்தில் பேசியபோது, சிறார்கள் பாதுகாப்பு விடயத்தில் ஒவ்வொரு மறைமாவட்ட ஆயர்களின் பொறுப்புணர்வு குறித்து மிகுந்த முக்கியத்துவம் வழங்கப்படுவதாகக் கூறினார்.

விசுவாசக்கோட்பாட்டு திருப்பேராயம் 2011ம் ஆண்டு கேட்டுக்கொண்டபடி, இதுவரை உலகின் 96 விழுக்காட்டு ஆயர்பேரவைகள், தங்கள், சிறார் பாதுகாப்பு விதிமுறைகளை வத்திக்கானுக்கு அனுப்பியுள்ளதாகவும் கூறினார் கர்தினால் O’Malley.

உலகின் 112 ஆயர் பேரவைகளுள் 5 மட்டுமே இத்தகைய விதிமுறைகளை இன்னும் அனுப்பிவைக்கவில்லை என உரைத்த கர்தினால் O’Malley அவர்கள், உள்நாட்டுப்போர், எபோலா நோய், ஏழ்மை போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் மேற்கு ஆப்ரிக்க நாடுகளே அவை என்பதையும் குறிப்பிட்டார்.

ஆதாரம் : CNS/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.