2015-02-07 16:24:00

குடும்பம் குறித்த உலக ஆயர்கள் மாமன்றத்துக்கு நவநாள் செபங்கள்


பிப்.07,2015. வருகிற அக்டோபரில் வத்திக்கானில் தொடங்கும் குடும்பங்கள் குறித்த உலக ஆயர்கள் மாமன்றத்துக்கு உலக அளவில் நவநாள் செபங்கள் தொடங்கியுள்ளன.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் அழைப்பின்பேரில் இந்நவநாள் பக்தி முயற்சிகள் பிப்.5, இவ்வியாழனன்று தொடங்கியுள்ளன.

ஒன்பது மாதங்கள் நவநாள் பக்தி முயற்சிகள் ஒவ்வொரு மாதமும் முதல் வியாழனன்று திருநற்கருணை ஆராதனை பக்தி முயற்சியாக நடைபெறும். இது அக்டோபர் முதல் தேதி வரை ஒவ்வொரு மாதமும் நடைபெறும்.

குடும்பங்கள் குறித்த உலக ஆயர்கள் மாமன்றம் வருகிற அக்டோபர் 5-19 வரை நடைபெறும்.

ஆதாரம் : CNA /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.