2015-02-07 16:19:00

உக்ரேய்ன் ஒற்றுமைக்கு கிறிஸ்தவத் தலைவர்கள் வேண்டுகோள்


பிப்.07,2015. உக்ரேய்னில் போர் நிறுத்த ஒப்பந்தத்தையும் மீறி மீண்டும் தாக்குதல்கள் தொடங்கியுள்ளதை முன்னிட்டு அந்நாட்டின் ஒற்றுமைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர் உக்ரேய்ன் கத்தோலிக்க மற்றும் ஆர்த்தடாக்ஸ் சபைத் தலைவர்கள்.

உக்ரேய்ன்க்கு ஆயுத உதவி வழங்குவது குறித்து அமெரிக்க ஐக்கிய நாடு பரிசீலித்துவரும்வேளை, உக்ரேய்ன் கத்தோலிக்க ஆயர் பேரவைத் தலைவர் Lviv பேராயர் Mieczyslaw Mokrzycki, உக்ரேய்ன் Lviv ஆர்த்தடாக்ஸ் சபைப் பேராயர் Filaret Kucherov  ஆகிய இருவரும் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் இறைவனால் வழங்கப்பட்ட சுதந்திரத்தை நாம் பாதுகாப்போம் எனக் கூறியுள்ளனர்.

போர் மனித வாழ்வுக்கு எதிரான குற்றம் என்றும், இது துன்பங்களையும், மரணங்களையும், அநீதிகளையும் கொண்டு வருகின்றது என்றும் கூறும் அவ்வறிக்கை, நம் முயற்சிகளை ஒன்றிணைப்பதன் மூலம் போரையும், தீமையையும் எதிர்கொள்ள இயலும் என்றும் கூறியுள்ளது.

கிழக்கு உக்ரேய்னில் தற்போது தற்காலிகப் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்தாலும், இதுநாள்வரை அங்கு நடந்துவந்த சண்டையில் பொதுமக்களுக்கு பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஏறக்குறைய 5,400 பேர் இறந்துள்ளனர். 12 இலட்சம் பேர் புலம் பெயர்ந்துள்ளனர்.

ஆதாரம் : CNS /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.