2015-02-05 15:44:00

100க்கும் மேற்பட்ட ஆயர்கள் ஒன்று கூடி அமைதிக்காக செபம்


பிப்.05,2015 சிரியா, பாகிஸ்தான், நைஜீரியா ஆகிய நாடுகளில் நிலையான அமைதி நிலவ, உரோம் நகரில் Trastevere எனுமிடத்தில் அமைந்துள்ள அன்னை மரியா பசிலிக்காவில் இவ்வியாழன் மாலை, 100க்கும் மேற்பட்ட ஆயர்கள் ஒன்று கூடி செபிக்கின்றனர்.

"புதியதொரு மனிதத்திற்காக இறைவாக்குரைக்கும் மக்கள்" என்ற கருத்துடன், சாந்த் எஜிதியொ என்ற அமைப்பினரால் உரோம் நகரில் நடைபெற்று வரும் ஒரு கருத்தரங்கில் கலந்துகொள்ள வந்திருக்கும் ஆயர்கள் இந்த செப முயற்சியில் ஈடுபடுகின்றனர்.

பிப்ரவரி 7, இச்சனிக்கிழமை முடிய நடைபெறும் இந்தக் கருத்தரங்கில் நெருக்கடியான சூழலை அனுபவித்துவரும் சிரியா, நைஜீரியா, மாலி, பாகிஸ்தான், நைஜர் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆயர்கள் தங்கள் நாட்டின் நிலையை எடுத்துரைத்து செபிக்கக் கூடிவருகின்றனர்.

இவ்வியாழன் மாலை உரோம் நகரில் இந்த செப முயற்சி நடைபெறும் அதேவேளையில், உலகின் வேறு நாடுகளில் சாந்த் எஜிதியொ அமைப்பைச் சேர்ந்தவர்கள் உலக அமைதிக்கான செப வழிபாட்டில் ஈடுபடுவர் என்று இவ்வமைப்பினர் கூறியுள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.