2015-01-23 15:34:00

கடுகுச் சிறுத்தாலும்.. : ஆண்டவனை அடைய, அறிவு வெறும் பாலமே


ஒரு மனிதர், ஞானி ஒருவரைத் தேடிப் போனார். ‘‘நான் கடவுளைச் சந்திக்க வேண்டும்!’’ என்றார். அவர் ‘பளார்’ என்று இவர் கன்னத்தில் அறைந்து விட்டார். வந்தவர் பயந்து ஓடிப் போனார். பக்கத்திலிருந்தவர்கள் ஞானியிடம் கேட்டார்கள்: ‘‘அவரை ஏன் அறைந்தீர்கள்?’’ என்று. “அவன் ஒரு பைத்தியக்காரன்! காற்றின் உறைவிடம் தேடி காலத்தை வீணாக்குகிறான். எங்கும் நிறைந்திருப்பவனை மூளைக்குள் முடக்கப் பார்க்கிறான். ஆம்! அவனையே அவன் தேடிக் கொண்டிருக்கிறான்!’’ என்று ப‌தில‌ளித்தார் ஞானி. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.