2015-01-22 16:03:00

நேர்காணல்–கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரம்–பாஸ்டர் கிப்சன் ஜான்


சன.22,2015. உலகிலுள்ள 345க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ சபைகள் ஒவ்வோர் ஆண்டும் சனவரி 18ம் தேதி முதல் புனித பவுல் மனந்திரும்பிய விழாவான சனவரி 25ம் தேதி வரை கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்தைக் கடைப்பிடிக்கின்றன. இவ்வாண்டின் இக்கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரம் இத்திங்களன்று தொடங்கியுள்ளது. “குடிக்க எனக்குக் கொஞ்சம் தண்ணீர் கொடும்”(யோவா.4,7-8) என்ற தலைப்பில் இக்கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரம் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. இவ்வாரத்தையொட்டி, பாஸ்டர் கிப்சன் ஜான் அவர்களைத் தொலைபேசியில் அழைத்தோம். இவர், பாளையங்கோட்டை கிறிஸ்து ஆலயப் போதகர் ஆவார்.








All the contents on this site are copyrighted ©.