2015-01-21 16:18:00

இரண்டு ஆட்டுக்குட்டிகளை திருத்தந்தை ஆசீர்வதித்தார்


சன.21,2015. புனித ஆக்னெஸ் விழாவான இப்புதன் காலை 8.50 மணிக்கு, வத்திக்கானில் தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தில் இரண்டு ஆட்டுக்குட்டிகளை, ஆசீர்வதித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்

உரோம் புனித ஆக்னஸ் பசிலிக்கா அருகிலுள்ள துறவு இல்லத்தில் வளர்க்கப்படும் இந்த ஆட்டுக்குட்டிகளிலிருந்து உரோமங்கள் எடுத்து பேராயர்கள் கழுத்தில் அணியும் பால்யங்கள் என்ற கழுத்துப்பட்டைகள் தயாரிக்கப்படுகின்றன.

இந்தப் பால்யங்கள், வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் புனித பேதுரு கல்லறைப் பீடத்தில் ஒரு சிறிய பெட்டியில் வைக்கப்படுகின்றன.

தூயவர்கள் பேதுரு பவுல் விழாவான ஜூன் 29ம் தேதியன்று இந்தப் பால்யங்களை, திருத்தந்தையர் புதிய பேராயர்களுக்கு அணிவிப்பது வழக்கமாக இருந்து வருகிறது.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.