சன.20,2015. இலங்கை மற்றும் பிலிப்பீன்ஸ் நாடுகளுக்குத் தனது திருத்தூதுப் பயணத்தை நிறைவுசெய்து வத்திக்கானுக்குத் திரும்பும் வழியில் உரோம் மக்களின் அன்னை மரியாவுக்கு நன்றி தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருத்தந்தைக்கெனச் சிறப்பாக விடப்பட்ட A340 பிலிப்பீன்ஸ் விமானத்தில் பத்திரிகையாளர்கள் மற்றும் சில திருஅவை அதிகாரிகளுடன் ஏறக்குறைய 15 மணி நேரங்கள் பயணம் செய்து இத்திங்கள் உள்ளூர் நேரம் மாலை 5.38 மணிக்கு உரோம் சம்ப்பினோ விமான நிலையம் வந்து சேர்ந்த திருத்தந்தை, விமான நிலையத்திலிருந்து வத்திக்கானுக்குக் காரில் வந்தபோது உரோம் புனித மரியா பசிலிக்கா சென்று பெரிய மலர்க்கொத்து ஒன்றை அர்ப்பணித்தார்.
இப்பெரிய மலர்க்கொத்து, மனிலா திருப்பீடத் தூதரகத்தில், ஓர் அருள்சகோதரி திருத்தந்தைக்கு வழங்கியதாகும்.
வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணங்களை நிறைவுசெய்த பின்னரும், அதற்கு முன்னரும் உரோம் மேரி மேஜர் அன்னை மரியா பசிலிக்கா சென்று செபிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |