2015-01-20 15:52:00

குழந்தை வளர்ப்பில் பெற்றோர் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்


சன.20,2015. பல குழந்தைகளைக் கொண்டிருக்கும்போது பெற்றோர் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டுமென்றும், குடும்பக்கட்டுபாடு திட்டங்கள் கருத்தியல் காலனி ஆதிக்கம் போன்றவை என்றும் விமானத்தில் பத்திரிகையாளர்கள் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஐஎஸ் இஸ்லாமிய நாட்டுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு, முக்கிய இஸ்லாம் தலைவர்கள் அழைப்பு விடுப்பது பற்றிய கேள்விக்குப் பதிலளித்த திருத்தந்தை, சாதாரண மிதவாத முஸ்லிம்களும் தங்கள் தலைவர்கள், ஐஎஸ் இஸ்லாமிய நாட்டுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறுதான் கூறுகின்றனர் என்றும் கூறினார்.

மேலும், அமெரிக்க ஐக்கிய நாட்டின் பிலடெல்ஃபியாவில் நடைபெறவிருக்கும் உலக குடும்ப மாநாட்டுக்கு வருகிற செப்டம்பரில் செல்லும்போது, ஐக்கிய நாடுகள் நிறுவனம், நியுயார்க், வாஷிங்டன் ஆகிய மூன்று இடங்களுக்குத் தான் செல்லவிருப்பதாகத் தெரிவித்தார்.

இத்திருத்தூதுப் பயணத்தின்போது  முத்திப்பேறுபெற்ற Junipero Serra அவர்களைப் புனிதராக அறிவிக்கவிருப்பதாகவும் தெரிவித்த திருத்தந்தை, மெக்சிகோவுக்கு அப்பயணத்தின்போது செல்லவில்லை என்றும் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.