2015-01-20 16:00:00

இலங்கை திருப்பயணம் அந்நாட்டு வரலாற்றில் முக்கியமான தருணம்


சன.20,2015. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இலங்கை திருத்தூதுப் பயணம் அந்நாட்டு வரலாற்றில் முக்கியமான தருணமாக இருந்தது என்று ஊடகங்கள் கருத்து தெரிவித்துள்ளன.

இம்மாதம் 13ம் தேதி காலை முதல் 15ம் தேதி காலை வரை இலங்கையில் திருத்தந்தை மேற்கொண்ட திருத்தூதுப் பயணம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஊடகங்கள், மின்னணு ஊடகங்களும், தினத்தாள்களும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பயண நிகழ்வுகள் ஒவ்வொன்றையும் படிப்படியாகப் பிரசுரித்திருந்தன எனக் கூறின.

இலங்கை திருத்தூதுப் பயணம், சமய மற்றும் வரலாற்று முக்கியத்துவம் பெற்றிருப்பதோடு அந்நாட்டின் வருங்கால தேசியத் தலைவர்களுக்கு மிக முக்கிய அரசியல் பாடத்தையும் கோடிட்டுக் காட்டியுள்ளது என்றும் ஊடகங்கள் கருத்து தெரிவித்துள்ளன.

ஒவ்வொரு தடவையும், திருத்தந்தை ஒருவரை இலங்கைக்கு அழைக்கும் அரசுத்தலைவர், அத்திருத்தந்தை அந்நாட்டுக்கு வருகை தரும்போது வரவேற்பதற்கு அந்த அரசுத்தலைவர் பதவியில் இருப்பதில்லை என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளன ஊடகங்கள்.

ஆதாரம் : ஊடகங்கள்








All the contents on this site are copyrighted ©.