2015-01-19 16:41:00

நற்செய்தி அறிவிப்புப் பேராயத் தலைவரின் வியட்நாம் பயணம்


சன.19,2015. வியட்நாமின் Da Nangல் நற்செய்தி அறிவிக்கப்பட்டதன் 400ம் ஆண்டு நிறைவுக் கொண்டாட்டங்களில் கலந்துகொள்வதற்கென இத்திங்களன்று வியட்நாம் சென்றுள்ளார் திருப்பீட நற்செய்தி அறிவிப்புப் பேராயத் தலைவர் கர்தினால் பெர்னான்டோ ஃபிலோனி.

வியட்நாம் நாட்டுக்கு மேற்கொண்டுள்ள இந்த ஒரு வாரச் சுற்றுப் பயணத்தில், Xuan Loc மறைமாவட்டம் உருவாக்கப்பட்டதன் ஐம்பதாம் ஆண்டு நிறைவுக் கொண்டாட்டங்களிலும் கலந்துகொள்வார் கர்தினால் ஃபிலோனி

இம்மாதம் 26ம் தேதி வரை இடம்பெறும் இப்பயணத்தில் வியட்நாம் ஆயர்கள், ஹனோய் உயர்மறைமாவட்டக் குருக்களைச் சந்தித்தில், ஹனோய் பேராலயத்தில் திருப்பலி, La Vang அன்னை மரியா திருத்தலத்தில் அருள்பணியாளர்கள், துறவிகள், பொதுநிலையினர் ஆகியோரைச் சந்தித்தல், சாய்கோனில் வருகிற ஞாயிறன்று திருப்பலி நிறைவேற்றல் என பல நிகழ்வுகளை நடத்தவுள்ளார் கர்தினால் ஃபிலோனி.

தென்கிழக்கு ஆசிய நாடாகிய வியட்நாம் கம்யூனிச நாடாகும்.

வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.