2015-01-17 15:00:00

பிலிப்பீன்சின் பாலோ பேராலயத்தில் திருத்தந்தை பிரான்சிஸ்


சன.17,2015. இந்த இனிய வரவேற்புக்கு நன்றி. இப்போது  இப்பேராலயத்தில் கர்தினால் தாக்லே அவர்களுடன், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களும் வந்து கொண்டிருக்கிறார். இன்று கர்தினால் பரோலின் அவர்களின் பிறந்த நாள். அவருக்காக ஏதாவது பாடுவீர்களாக என்று திருத்தந்தை கேட்டதும், எல்லாரும் பிறந்த நாள் வாழ்த்து என்று ஆங்கிலத்தில் பாடினர். உடனே நன்றி என்று சொன்ன திருத்தந்தை, இப்போது ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். அது எனக்கும் பிடிக்கவில்லைதான். ஏற்கனவே திட்டமிட்டபடி விமானம் இங்கிருந்து மாலை 5 மணிக்கு மனிலா புறப்படுவதாக இருந்தது. ஆனால் இரண்டாம்நிலை புயல் நம்மைச் சுற்றி வீசுகிறது. எனவே மதியம் ஒரு மணிக்கு இங்கிருந்து செல்ல வேண்டும் என விமான ஓட்டுனர் வலியுறுத்துகிறார். எனவே உங்கள் எல்லாரிடமும் மன்னிப்புக் கேட்கிறேன். உங்களுக்காகச் சிறப்பாக ஒன்றைத் தயார் செய்து வைத்துள்ளேன். அதைச் சொல்ல முடியாத நிலைக்காக வருந்துகிறேன். நான் இப்போது செல்லவேண்டியிருப்பதால் அன்னைமரியின் கரங்களில் எல்லாவற்றையும் விட்டுவிடுவோம். உங்களுக்குப் பிரச்சனை என்னவெனத் தெரியுமா, விமானம் இங்கு தரையிறங்க முடியாது. அருள்நிறைந்த மரியே செபத்தை சேர்ந்து இப்போது செபிப்போம். பின்னர் எனது ஆசீரை அளிக்கிறேன் என்று பாலோ பேராலயத்தில் கூறினார் திருத்தந்தை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.