2015-01-17 14:52:00

தக்லோபானில் திருப்பலியின் இறுதியில் திருத்தந்தை செபம்


சன.17,2015. இயேசு கிறிஸ்துவின் பாடுகள், மரணம் மற்றும் உயிர்ப்பை நாம் இப்போது கொண்டாடி முடித்துள்ளோம். நம் பயணத்தில் இயேசு நமக்கு முன்னே செல்கிறார். நாம் செபித்துக் கொண்டாடுவதற்குச் சேர்ந்துவரும் ஒவ்வொரு நேரமும் இயேசுவும் நம்மோடு இருக்கிறார். ஆண்டவரே இன்று எங்களோடு இருப்பதற்கு நன்றி. எங்களின் வேதனைகளைப் பகிர்ந்து கொள்வதற்காக நன்றி ஆண்டவரே. இந்த வாய்ப்பை அளித்ததற்காக நன்றி ஆண்டவரே. உமது பெரும் கருணைக்காக நன்றி ஆண்டவரே. எங்களில் ஒருவராக இருப்பதற்கு விரும்புவதற்காக நன்றி ஆண்டவரே. சிலுவைத் துன்ப நேரங்களிலும் எங்களோடு எப்போதும் இருக்கிறீர், இதற்கு நன்றி ஆண்டவரே. எங்களுக்கு நம்பிக்கை அளித்ததற்காக நன்றி ஆண்டவரே. ஆண்டவரே, எங்களிடமிருந்து ஒருபோதும் நம்பிக்கை எடுக்கப்பட்டுவிடக் கூடாது. ஆண்டவரே, உமது வாழ்வின் இருளான நேரங்களில் சிலுவையில் எங்களை நினைத்து, உமது தாயை எங்களுக்குத் தாயாகக் கொடுத்ததற்கு நன்றி. அநாதைகளாக எங்களைக் கைவிடாமல் இருப்பதற்காக நன்றி ஆண்டவரே....

இவ்வாறு செபித்த திருத்தந்தை, இம்மக்களுக்குத் தனது ஆசீரையும் அளித்தார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.