2015-01-17 14:31:00

கடுகு சிறுத்தாலும்-பிரச்சனைகளைப் பார்த்து பயந்து ஓடாதே


ஒருமுறை சுவாமி விவேகானந்தர் அவர்கள் சாலையில் நடந்து போய்க் கொண்டிருந்தார். வழியில் சில குரங்குகள் அவரைத் துரத்தத் தொடங்கின. உடனே அவர் வேகமாக நடக்கத் தொடங்கினார். அப்போதும் குரங்குகள் அவரை விடவில்லை. தொடர்ந்து துரத்தின. ஒரு கட்டத்தில் குரங்குகள் சுவாமி விவேகானந்தர் அவர்களை நெருங்கி வந்துவிட்டன. அப்பொழுது அவருக்குப் பின்னாலிருந்து ஒரு குரல் கேட்டது. சுவாமி அவர்கள் திரும்பிப் பார்த்தபோது ஒரு பெரியவர் சொன்னார் - ஓடாதே, எதிர்த்து நில் என்று. உடனே சுவாமி விவேகானந்தர் அவர்களும் வேகமாக நடப்பதை நிறுத்திவிட்டு, அதே வேகத்தோடு திரும்பி நின்றார். குரங்குகள் எல்லாம் வந்த வழியே திரும்பி ஓடிவிட்டன.

நமக்கு வருகின்ற பிரச்சனைகளைக் கண்டு தப்பி ஓட முயற்சிக்கும்போது எளிய பிரச்சனைகள் பெரிய பிரச்சனைகளாக நம்மைத் துரத்துகின்றன

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.