சன.10,2015. அமைதியான மற்றும் நல்லிணக்கமுள்ள சமுதாயங்களைக் கட்டியெழுப்புவதில் மதங்களுக்கும், சமயத் தலைவர்களுக்கும் முக்கியமான பங்கு உள்ளது என்று, புதிதாக கர்தினாலாக அறிவிக்கப்பட்டுள்ள பாங்காக் பேராயர் Kriengsak Kovitvanit அவர்கள் கூறினார்.
தங்களின் மனச்சாட்சியின்படி ஒருவர் ஒருவரை அன்புகூருவதற்கு, தங்களின் விசுவாசிகள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் அனைத்து மதங்களும் ஒன்றிணைந்து செயல்படுமாறு வலியுறுத்தியுள்ளார் பாங்காக் பேராயர் Kovithavanij.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அறிவித்துள்ள இருபது புதிய கர்தினால்களில் உறுப்பினர்களாக உள்ள மூன்று தென்கிழக்கு ஆசியக் கர்தினால்கள், அப்பகுதியில் கத்தோலிக்கத் திருஅவையை மேலும் பிரபலமடையச் செய்ய முடியும் என்றும் கருத்து தெரிவித்தார் பேராயர் Kovithavanij.
இம்மாதம் 4ம் தேதி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அறிவித்துள்ள இருபது புதிய கர்தினால்களில், 66 வயதாகும் பாங்காக் பேராயர் Kriengsak Kovitvanit அவர்களும் ஒருவர். மேலும், மியான்மார் பேராயர் சார்லஸ் போ, வியட்நாம் பேராயர் நுகுயென் வான் நோன் ஆகியோரும் புதிய கர்தினால்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
ஆதாரம் : Fides
All the contents on this site are copyrighted ©. |