சன.10,2015. இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவடைந்து ஐந்து ஆண்டுகள் நிறைவுற்றிருக்கும் சூழலில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இலங்கை திருத்தூதுப் பயணம் ஒப்புரவின் அடையாளமாக அமையும் என்று கூறியுள்ளார் இலங்கை தலத்திருஅவை அதிகாரி ஒருவர்.
வருகிற செவ்வாயன்று இலங்கையில் திருத்தூதுப் பயண நிகழ்வுகளைத் தொடங்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் உரைகளைவிட, அச்சமயங்களில் அவர் வெளிப்படுத்தும் சைகைகள் ஒரு செய்தியாக இருக்கும் என்று கொழும்பு உயர்மறைமாவட்ட அருள்பணியாளர் பிரசாத் ஹர்ஷன் கூறினார்.
எவ்விதப் புறத்தூண்டுதல் இல்லாமல் அவர் தானாக வெளிப்படுத்தும் செயல்கள், அவர் சில காரியங்களைச் செய்யும் முறைகள் போன்றவைகளைப் பார்ப்பதற்குத் தாங்கள் காத்திருப்பதாகவும் தெரிவித்தார் அருள்பணியாளர் பிரசாத் ஹர்ஷன்.
“என் அன்பில் நிலைத்திருங்கள்” என்ற தலைப்பில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இலங்கை திருத்தூதுப் பயணம் நடைபெறவுள்ளது. இத் திருத்தூதுப் பயண நிகழ்வுகள் இம்மாதம் 13 முதல் 15 காலை வரை நடைபெறும்.
இலங்கையின் 2 கோடியே 4 இலட்சம் மக்களில் 70 விழுக்காட்டுக்கும் மேற்பட்டோர் புத்த மதத்தினர்.
ஆதாரம் : CNA
All the contents on this site are copyrighted ©. |