சன.10,2015. திருப்பீட விசுவாசக் கோட்பாட்டுப் பேராயத் தலைவர்களும், ஐரோப்பிய ஆயர் பேரவைகளின் விசுவாசக் கோட்பாட்டு ஆணையங்களின் தலைவர்களும் அடுத்த வாரத்தில் ஹங்கேரி நாட்டு எஸ்டர்காம் நகரில் மூன்று நாள் கூட்டம் ஒன்றை நடத்தவுள்ளனர்.
ஆயர் பேரவைகளுக்குள் விசுவாசக் கோட்பாட்டு ஆணையம் ஒன்று உருவாக்கப்பட்டு, அந்த ஆணையங்களுக்கு விசுவாசக் கோட்பாட்டுப் பேராயம் உதவி செய்யுமாறு முத்திப்பேறு பெற்ற திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்கள் கேட்டுக்கொண்டதன்பேரில் தலத்திருஅவைகளின் ஆணையங்களுக்கும், விசுவாசக் கோட்பாட்டுப் பேராயத்திற்மிடையே அவ்வப்போது கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இதன் அடிப்படையில் இம்மாதம் 13 முதல் 15 வரை திருப்பீட விசுவாசக் கோட்பாட்டுப் பேராயத் தலைவர்களுக்கும், ஐரோப்பிய ஆயர் பேரவைகளின் விசுவாசக் கோட்பாட்டு ஆணையங்களின் தலைவர்களுக்கும் இடையே கூட்டம் நடைபெறவுள்ளது.
இலத்தீன் அமெரிக்காவின் போகோட்டாவில் 1984ம் ஆண்டிலும், ஆப்ரிக்காவின் கின்ஷாசாவில் 1987ம் ஆண்டிலும், ஐரோப்பாவின் வியன்னாவில் 1989ம் ஆண்டிலும், ஆசியாவின் ஹாங்காங்கில் 1993ம் ஆண்டிலும், இலத்தீன் அமெரிக்காவின் குவாதலஹாராவில் 1996ம் ஆண்டிலும், வட அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் 1999ம் ஆண்டிலும் இத்தகைய கூட்டங்கள் நடைபெற்றுள்ளன.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |