2015-01-10 17:06:00

உலகின் நீண்ட திருக்குறள் பதிப்பு சென்னையில் வெளியீடு


சன.10,2015. தமிழர் பண்பாட்டு மையமும் தமிழ் ஆன்றோர் அவையும் இணைந்து  சென்னை மெரினா கடற்கரையில் இஞ்ஞாயிறன்று வரலாற்றில் முதல் முறையாக உலகின் மிக நீண்ட திருக்குறள் பதிப்பு ஒன்றை வெளியிடவுள்ளது.

1330 திருக்குறளும் 400 அடி நீளமுள்ள ப்ளெக்ஸ் பேனர் என்று சொல்லப்படும் பதாகையில் அச்சிடப்ட்டு அது பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படுகிறது.  திருவள்ளுவர் உலகிற்கு வழங்கிய திருக்குறளின் பெருமையை இந்தியாவில் உள்ள தமிழர் அல்லாதவர்களுக்கும் சென்று சேர வேண்டும், இந்திய அரசு திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும், வடநாட்டவர்களுக்கு திருக்குறள் ஒரு பாடமாக கற்பிக்கப்படுதல் வேண்டும் என்ற நோக்கத்துடன் வெளியிடப்படுகிறது.

இந்திய ஆட்சியாளர்களும் திருக்குறள் காட்டிய நெறிப்படி ஆட்சி நடத்தி வள்ளுவர் வகுத்த, மொழி, இன சமத்துவத்தைப் பேணும் மக்களாட்சியை வழங்க வேண்டும். இதை கருத்தில் கொண்டு இந்த சாதனை முயற்சியை இந்த அமைப்புகள் எடுத்துள்ளன எனக் கூறப்பட்டுள்ளது.

 ஆதாரம் : தினமணி








All the contents on this site are copyrighted ©.