சன.10,2015. ஈராக்கில் கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் கிறிஸ்தவ விசுவாசம் எளிதாக மறைந்துவிட இயலாது என்று அந்நாட்டுக் கத்தோலிக்கப் பேராயர் ஒருவர் கூறினார்.
கடந்த கோடை காலத்திலிருந்து ஐஎஸ் இஸ்லாமிய நாட்டினரின் கைவசம் இருக்கின்ற மொசூல் நகரின் கல்தேய கத்தோலிக்க வழிபாட்டுமுறை பேராயர் எமில் நோனா அவர்கள் CNA செய்தி நிறுவனத்திடம் இவ்வாறு கூறினார்.
ஈராக் கிறிஸ்தவர்களுக்கு விசுவாசம் முக்கியமானது, இது தங்களின் வாழ்வு, இது தங்களின் தனித்துவம், இது தங்களின் வாழ்வுமுறை, எந்த வழியிலும் தங்களின் வாழ்விலிருந்து விசுவாசத்தை அகற்ற முடியாது என்றுரைத்த பேராயர் நோனா அவர்கள், ஈராக் மண்ணில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் கிறிஸ்தவ விசுவாசத்தை எளிதாக அழித்துவிட இயலாது என்று கூறினார்.
இதற்கிடையே, சிரியா நாட்டில் தெருவில் வித்தைகள் காட்டும் ஒருவரின் தலையை வெட்டிக் கொன்றுள்ளனர் ஐஎஸ் இஸ்லாமியத் தீவிரவாதிகள்.
இவ்வித்தைக்காரர், இஸ்லாமுக்கு எதிராக வித்தைகளைக் காட்டுகிறார், கடவுளை அவமதிக்கிறார், போலிகளை உருவாக்குகிறார் என்று ஐஎஸ் தீவிரவாதிகள் குற்றம் சுமத்தியதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.
ஆதாரம் : CNA
All the contents on this site are copyrighted ©. |