2015-01-09 15:40:00

உலகில் இன்னும் 14 கோடியே 40 இலட்சம் சிறார் தொழிலாளர்


சன.09,2015. சிறார் தொழில்முறை உலகில் தடைசெய்யப்பட்டிருக்கின்றபோதிலும், உலகில் இன்னும் 5 வயதுக்கும் 15 வயதுக்கும் உட்பட்ட ஏறக்குறைய 14 கோடியே 40 இலட்சம் சிறார் தொழிலாளர் உள்ளனர், இவர்களில் பெரும்பான்மையினர் வேளாண்மைத் தொழில் செய்கின்றனர் என்று உலக தொழில் நிறுவனம் கூறியது.

ஹொண்டூராஸ் நாட்டில் 5 இலட்சம் சிறார் வேலை செய்கின்றனர் என்றும், இவர்கள் அந்நாட்டின் இளையோர் எண்ணிக்கையில் ஏறக்குறைய 15 விழுக்காடு என்றும் அந்நாட்டின் தேசிய கணக்கெடுப்பு கூறுகிறது.

ஹொண்டூராஸ் நாட்டின் Tegucigalpa நகரின் குப்பை மேடுகளில் பல சிறார் சாக்குகளில் பொருள்களை நிரப்புவதைக் காண முடிகின்றது என்றும், மற்ற சிறார் போதைப்பொருள்களை விற்று குற்றக் கும்பல்களுக்குப் பணம் கொடுக்கின்றனர் என்றும் 

அக்கணக்கெடுப்பு கூறுகிறது.

ஹொண்டூராஸ் நாட்டில் சட்டமுறையான குறைந்த மாத ஊதியமான 380 டாலரைவிடக் குறைவாகவே சிறார் தொழிலாளர் பெறுகின்றனர் என்று ஊடகச் செய்தி ஒன்று கூறுகிறது.

ஆதாரம் : AP








All the contents on this site are copyrighted ©.