டிச.30,2014. எபோலா உயிர்க்கொல்லி நோயால் இதுவரை ஏறக்குறைய இருபதாயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக
உலக நலவாழ்வு நிறுவனம் அறிவித்துள்ளது. உலக நலவாழ்வு நிறுவனம் கடந்த சனிக்கிழமையன்று
வெளியிட்ட தகவலின்படி இதுவரை எபோலாவால் 20 ஆயிரத்து 81 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும்
இந்நோயால் 7,842 பேர் இறந்துள்ளனர் என்று தெரிகிறது. மேற்கு ஆப்ரிக்க நாடுகளான லைபீரியா,
கினி, சியரா லியோன் ஆகிய நாடுகள் இந்நோயால் கடும் உயிரிழப்புகளுக்கு ஆளாகி இருக்கின்றன.