டிச.29,2014. 2014ம் ஆண்டு நம்மைவிட்டு மறையவிருக்கும் இவ்வேளையில், இந்த ஆண்டில் மகிழ்வான
மற்றும் சோகமான பல நிகழ்வுகள் நடந்துள்ளதை நாம் காண்கிறோம். இஞ்ஞாயிறு காலையில்கூட இந்தோனேசியாவிலிருந்து
162 பேருடன் சிங்கப்பூர் சென்ற ஏர் ஏசியா விமானம் விபத்துக்குள்ளாகி கடலுக்கடியில் கிடப்பதாக
செய்திகள் வெளியாகியுள்ளன. இப்படி 2014ம் ஆண்டில் நடந்த பல நல்ல, துயர நிகழ்வுகளை நம்முடன்
தொலைபேசி வழியாகப் பகிர்ந்து கொள்கிறார் பேராசிரியர் ஆன்டனி பால், இவர், மதுரை கருமாத்தூர்
புனித அருளானந்தர் தன்னாட்சிக் கல்லூரியில் வரலாற்றியியல் துறையின் தலைவராவார்.