டிச.29,2014. மத்திய சீன மாநிலமான Zhejiangல் அண்மை மாதங்களில் 400க்கும் மேற்பட்ட கோவில்களிலிருந்து
கம்யூனிச அதிகாரிகள் சிலுவைகளை அகற்றியுள்ளதாக AP செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது. சிலுவைகளை
கம்யூனிச அதிகாரிகள் அகற்றியுள்ளதுடன், மீண்டும் அவ்விடங்களில் சிலுவைகள் வைக்கப்படாமலிருப்பதையும்
அவர்கள் கண்காணித்து வருவதாகவும் கிறிஸ்தவ அதிகாரிகள் தெரிவித்தனர். Zhejiang மாநிலத்தின்
பள்ளிகளில் கிறிஸ்து பிறப்பு பெருவிழாக் கொண்டாட்டங்கள் இடம்பெறக்கூடாது என்ற கட்டளையையும்
அதிகாரிகள் பிறப்பித்துள்ளனர். இம்மாநிலத்தில் கிறிஸ்தவத்தின் வளர்ச்சியைத் தடுக்கும்
நோக்கில் அப்பகுதி சீன அதிகாரிகள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுவருவதாக கிறிஸ்தவத்
தலைவர்கள் கவலையை வெளியிட்டுள்ளனர்.