2014-12-29 16:35:27

இவ்வாண்டில் திருத்தந்தையின் நிகழ்வுகளில் பங்குபெற்றோரின் எண்ணிக்கை


டிச.29,2014. திருத்தந்தையின் புதன் மறையுரை, நண்பகல் மூவேளை செப உரை, திருப்பலிகள் உட்பட பல்வேறு நிகழ்வுகளில் 2014ம் ஆண்டில் ஏறத்தாழ 60 இலட்சம் பேர் பங்குபெற்றுள்ளதாக திருப்பீட இல்ல நிர்வாக அலுவலகம் அறிவிக்கிறது.
வத்திக்கான் நாட்டிற்குள் நடந்த நிகழ்வுகளில் . திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் கலந்துகொண்ட மக்களின் எண்ணிக்கையை மட்டுமே இந்த அலுவலகம் அறிவித்துள்ளது.
2013ம் ஆண்டு மார்ச் மாதம் 13ம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2014ம் ஆண்டில் 43 புதன் மறையுரைகளை வழங்கியுள்ளார். இதில் மட்டும் ஏறத்தாழ 12 இலட்சம் பேர் கலந்துகொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திருத்தந்தையின் நண்பகல் மூவேளை செப உரையின்போது கலந்துகொண்டவர்கள் 30 இலட்சத்து 40ஆயிரம் எனவும், திருவழிபாட்டுக் கொண்டாட்டங்களில் கலந்து கொண்டவர்கள் 11 இலட்சத்து 10 ஆயிரத்து 700 எனவும், புதன் மறையுரை தவிர ஏனைய சிறப்புச் சந்திப்புக்களில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 67 ஆயிரத்து 100 எனவும் திருப்பீட இல்ல நிர்வாக அலுவலகம் தெரிவிக்கிறது.

ஆதாரம் : ANSA








All the contents on this site are copyrighted ©.