2014-12-23 15:25:57

திருத்தந்தை பிரான்சிஸ் : ஆண்டவரே, பாவப்பிடியிலுள்ள எம்மை மீட்க வந்தருளும்!


டிச.23,2014. “சில நேரங்களில் நாம் பாவத்துக்கு அடிமைகளாக இருக்கிறோம், ஆண்டவரே, எம்மை மீட்க வந்தருளும்”என்ற வார்த்தைகளை, இச்செவ்வாயன்று தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், டிசம்பர் 24, இப்புதன் உள்ளூர் நேரம் இரவு 9.30 மணிக்கு வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் கிறிஸ்மஸ் திருவிழிப்புத் திருப்பலியைத் தொடங்குவார் திருத்தந்தை பிரான்சிஸ்.
டிசம்பர் 25, வியாழன் உள்ளூர் நேரம் பகல் 12 மணிக்கு, வத்திக்கான் பசிலிக்காவின் முகப்பு மாடத்திலிருந்து ஊருக்கும் உலகுக்குமென, ஊர்பி எத் ஓர்பி செய்தியையும், ஆசீரையும் அளிப்பார் திருத்தந்தை.
டிசம்பர் 25, வியாழன் உள்ளூர் நேரம் காலை 10.30 மணிக்கு வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் கிறிஸ்மஸ் பெருவிழா திருப்பலியை நிறைவேற்றுவார் கர்தினால் ஆஞ்சலோ கொமாஸ்த்ரி. இவர், வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தின் தலைமைக் குரு ஆவார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.