2014-12-23 15:26:54

டிசம்பர் 25, "நல்லாட்சி நாள்", இந்திய அரசு


டிச.23,2014. டிசம்பர் 25ம் தேதியை, "நல்லாட்சி நாள்" என்றும், இந்நாள் தேசிய அளவில் சிறப்பிக்கப்படும் என்றும், இந்நாளில் எல்லா நிறுவனங்களும், குடிமக்களும், கழகங்களும், அனைத்து மதத்தினரும் நல்லாட்சி குறித்து சிந்திக்குமாறும் இந்திய அரசு கூறியுள்ளது.
நேர்மை, ஒளிவுமறைவற்றநிலை, பொதுநலன், பொதுநல ஆர்வம், அனைவருக்கும் மாண்பு, சம உரிமைகள், சம வாய்ப்புகள் போன்ற கோட்பாடுகள் குறித்து இந்நாளில் சிந்திக்குமாறும் கூறியுள்ளது இந்திய அரசு.
அரசின் இவ்வறிவிப்பை வரவேற்று, பீதெஸ் செய்தி நிறுவனத்துக்கு செய்தி அனுப்பியுள்ள இந்தியக் கிறிஸ்தவர்களின் உலக அவையின்(GCIC) தேசியத் தலைவர் Sajan George அவர்கள், நல்லாட்சி நாளுக்கு கிறிஸ்மஸ் தினத்தைத் தேர்ந்தெடுத்திருப்பது கிறிஸ்துவுக்குப் புகழுரை செலுத்துவதாக உள்ளது எனக் கூறியுள்ளார்.
எனினும், இந்தியாவில் மக்களாட்சியில் நம்பிக்கை வைக்கும் எவரும், நல்லாட்சி என்பது கிறிஸ்மஸ் நாளில் மட்டுமன்றி, ஆண்டின் ஒவ்வொரு நாளும் நல்லாட்சி அமையவே விரும்புவர் என்று மேலும் கூறினார் Sajan K. George.

ஆதாரம் : Fides







All the contents on this site are copyrighted ©.