சுனாமியால் பாதிக்கப்பட்ட ஆசிய நாடுகள், பேரிடர்களை எதிர்கொள்வதற்கு நன்கு தயாரிப்பு,
ஐ.நா.
டிச.23,2014. பத்தாண்டுகளுக்கு முன்னர் இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட சுனாமியால் கடுமையாகப்
பாதிக்கப்பட்ட தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகள், பேரிடர்களை எதிர்கொள்வதற்குத்
தங்களை நன்கு தயாரித்துள்ளன என்று ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம் கூறியது. ஆழிப்பேரலை
ஏற்பட்ட பத்தாண்டு நினைவு தினத்தை, டிசம்பர் 26, வருகிற வெள்ளிக்கிழமையன்று கடைப்பிடிப்பதற்கு
நாடுகள் தயாரித்துவரும்வேளை, இப்பேரிடரால் கற்றுக்கொண்ட பாடங்கள் குறித்து ஆய்வு செய்த
இந்நிறுவனத்தின் ஆசிய-பசிபிக் பகுதி பிரதிநிதி Hiroyuki Konuma இவ்வாறு கூறியுள்ளார். எனினும்,
நாடுகள் பேரிடர் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் அதிகமாக எடுக்கவேண்டியுள்ளது என்றுரைத்த
Konuma, முன்கூட்டியே எச்சரிக்கும் அமைப்புகள் மிகவும் முக்கியம் என்றும் கூறினார்.
2004ம் ஆண்டு டிசம்பரில் இடம்பெற்ற ஆழிப்பேரலையில் 2 இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள்
இறந்தனர்.