இறைவனின் அன்பு அனைத்தையும் இயலக்கூடியதாய் மாற்றுகின்றது, மங்கோலியத் தியாக்கோன்
டிச.23,2014. எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும், இறைவனின் அன்பு அனைத்தையும் இயலக்கூடியதாய்
மாற்றும் என்பதில் தாங்கள் நம்பிக்கை கொண்டிருப்பதாகக் கூறினார் மங்கோலியத் தியாக்கோன்
ஒருவர். மங்கோலியத் தலத்திருஅவையில் முதல் தியாக்கோனாகத் திருநிலைப்படுத்தப்பட்டுள்ள
Joseph Enkh-Baatar அவர்கள் ஆசியச் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், தனது நாட்டில்
நற்செய்தியை வாழ்ந்து இறைவனின் செய்தியை தன்னால் அறிவிக்க முடியும் என்று கூறினார். இயற்கையை
வழிபடுவோரின் மரபுகளோடு முதலாளித்துவமும் விலக்கப்பட்டுள்ள இந்நாட்டில் கிறிஸ்தவராக வாழ்வது
மிகவும் கடினம், எனினும், தாங்கள் நம்பிக்கையை இழக்கவில்லை என்று கூறினார் Joseph Enkh-Baatar.
முன்னாள் கம்யூனிச நாடாகிய மங்கோலியாவில் புத்த மதத்தினரும், இயற்கையை வழிபடுவோரும்
பெரும்பான்மையாக உள்ளனர். இந்நாட்டில் 22 ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட திருஅவையில்
கத்தோலிக்கர் இரண்டாயிரத்துக்கும் குறைவே. தென்கொரியாவின் தெஜோனில் இம்மாதம் 10ம்
தேதி தியாக்கோனாகத் திருநிலைப்படுத்தப்பட்டார் Joseph Enkh-Baatar.