குஜராத்தில் கிறிஸ்தவர்கள் மதம் மாற வைக்கப்பட்டுள்ளனர்
டிச.22,2014. விஷ்வ இந்து பரிஷத் என்ற அடிப்படைவாத அமைப்பின் சார்பில், குஜராத்தில் நடத்தப்பட்ட
மதமாற்ற நிகழ்ச்சியில் 225 கிறிஸ்தவர்கள், இந்து மதத்தை தழுவியுள்ளதாக செய்தி நிறுவனங்கள்
தெரிவிக்கின்றன. குஜராத்தின் அர்னாய் என்ற கிராமத்தின் மலைவாழ் மக்களிடையே நடத்தப்பட்ட
இந்த மதமாற்ற நிகழ்ச்சியில், சிறப்புப் பூசைகள் மற்றும் யாகத்திற்குப் பின், இவர்கள்
225 பேரும் தாய் மதத்திற்கு திரும்பியுள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே உத்திரபிரதேசத்தின்
ஆக்ராவில், பஜ்ரங்தள் நடத்திய பூசையில், இஸ்லாமியர் சிலர் இந்து மதத்திற்கு திரும்பியதாக
அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே, கறுப்புப்பணத்தை மீட்டெடுப்போம், வேலைவாய்ப்புகளை
உருவாக்குவோம் என அளித்த வாக்குறுதிகளை விடுத்து, மதமாற்றத்தில் அரசு கவனம் செலுத்திவருவதாக,
இந்தியாவின் இரு அவைகளிலும் சமஜ்வாதி, ஐக்கிய ஜனதா தளம், திரிணாமூல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள்
தங்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.