அனைத்துவிதமான வன்முறை நடவடிக்கைகளும் நிறுத்தப்படுவதற்கு எருசலேம் முதுபெரும் தந்தை
வேண்டுகோள்
டிச.19,2014. புனித பூமியில் இடம்பெறும் அனைத்துவிதமான வன்முறை நடவடிக்கைகளையும் கண்டித்துள்ள
அதேவேளை, அவை நிறுத்தப்பட வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்துள்ளார் எருசலேம் இலத்தீன்
வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தை Fouad Twal. Gazaவில் இடம்பெறும் சண்டையும், அதனால்
ஏற்படும் கடும் அழிவுகளும், கொலைகளும் மிகுந்த வேதனை அளித்துள்ளது, அதேநேரம், அப்பாவி
மக்களுக்கு எதிரான வன்முறை மற்றும் பழிவாங்கும் செயல்களைத் தான் வன்மையாய்க் கண்டிப்பதாகக்
கூறியுள்ளார் முதுபெரும் தந்தை Fouad Twal. தனது கிறிஸ்மஸ் செய்தியில் இவ்வாறு கூறியுள்ள
முதுபெரும் தந்தை Fouad Twal அவர்கள், தொழுகைக்கூடத்தில் மக்கள் செபித்துக்கொண்டிருந்தபோது
கொல்லப்பட்டது மற்றும் மசூதிகளுக்கு எதிரான தாக்குதல்களையும் கண்டித்துள்ளார். முதுபெரும்
தந்தை Fouad Twal அவர்கள் எதிர்பாராதவிதமாக Ammanக்குச் செல்லவேண்டியிருந்ததால், அவரின்
கிறிஸ்மஸ் செய்தியை துணை ஆயர் William Shomali அவர்கள் வாசித்தார்.