டிச.16,2014. பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள இராணுவத்துக்குச் சொந்தமான பள்ளியைக்
குறிவைத்து நடத்தப்பட்டுள்ள தாக்குதலில் குறைந்தது 126 பேர் இறந்துள்ளனர், இவர்களில்
பெரும்பாலானோர் சிறார் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். இராணுவப் பள்ளிக்குள் நுழைந்த
6 தீவிரவாதிகள் சரமாரியாக நடத்திய தாக்குதலில் பலர் பலியாகினர். ஆயினும், இத்தீவிரவாதிகள்
அனைவருமே கொல்லப்பட்டுள்ளனர் என செய்திகள் கூறுகின்றன. இதற்கிடையே, இப்பள்ளியிலிருந்து
ஏறக்குறைய 500 சிறார் வெளியேற்றப்பட்டிருப்பதாக இராணுவம் கூறியுள்ளது. ஆஸ்திரேலியாவின்
சிட்னி நகரில் ஒரு கொடூர குற்றவாளி பலரை சிறை வைத்த நிகழ்வு முடிவுக்கு வந்த 24 மணி நேரத்திற்குள்
பாகிஸ்தான் இராணுவப் பள்ளியில் பயங்கரவாதிகள் பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்து சரமாரியாகச்
சுட்டதில் பலர் இறந்துள்ளனர். இந்த வன்முறை நிகழ்வுக்கு தெக்ரிக் இ தலிபான் பயங்கரவாத
அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக ஊடகச் செயதிகள் கூறுகின்றன.